விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள் மீட்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட, சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானத்தின் பாகங்கள் யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட விமான பாகங்களானது, கடந்த 1992ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்ட பலாலி விமானப்படையினருக்குச் சொந்தமான விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விமானப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், விமானப்படையினரின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விமானத்தின் பாகங்களையும் மீட்டுள்ளனர்.

சுமார் 25 வருடங்களின் பின்னர் குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

air1