நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்! – சோனம் கபூர்

நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகை சோனம்கபூர் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள யுடிஏ நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் அவருக்கு பொருத்தமான ஹாலிவுட் படவாய்ப்பை தேடிவருகிறார்கள்.

இது குறித்து சோனம்கபூர் அளித்த பேட்டியில், “ இந்தி பட உலகம் ஆனாலும், ஹாலிவுட் என்றாலும் நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். என்னை தேடிவரும் எல்லா  படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டேன். சீன படம் உள்பட எந்த மொழிபடமாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே  முன்னுரிமை கொடுப்பேன்.

நான் ஹாலிவுட் சென்றாலும் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா அளவுக்கு வரமுடியாது. அவர்களுடன் என்னை ஒப்பிடமாட்டேன்.  அவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். நான் அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு  வருவேன்” என்று மனம் திறந்து சொல்லி இருக்கிறார்.