5 ஆண்டுக்கு முன் அனுப்பிய விண்கலம் வியாழனை அண்மித்தது

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு மேற்கொள்ள 5 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘ஜுனோ’ என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி புளேறிடாவின் கேப் கான வரவில் இருந்து செலுத்தப்பட்டது.

‘ஜுனோ’ விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்து வந்தது. மேகங்களுக்கு இடையே மணிக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது.

இந்த நிலையில் ‘ஜுனோ’ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது. கடந்த ஜூலை 4-ந்தேதி வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது இக்கிரகத்தின் மேகமூட்டத்தின் மேல் 4200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்து வருகிறது.

இந்த ‘ஜுனோ’ விண்கலம் வருகிற 2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வியாழன் கிரகத்தை அடைந்து தனது பயணத்தை முடிக்கிறது.

இத்தகவலை ஜுனோ விண்கல முதன்மை தயாரிப்பாளர் ஸ்காட் பால்டன் தெரிவித்துள்ளார்.