Tag Archives: ஆசிரியர்தெரிவு

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு?

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை நண்பரும் தமிழரசுக்கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் கருத்து வெளியிடுகையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையினில், கிளிநொச்சியினில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் போனோரது பாதுகாவலர்களது போராட்டத்திற்கு சென்றிருந்த மாவை சேனாதிராசா இத்தகைய போராட்டங்கள் நல்லாட்சி அரசிற்கு நெருக்குதல்களை வழங்கி மஹிந்த ஆட்சிபீடமேற வழிகோலிவிடுமென தெரிவித்திருந்தார். இக்கருத்து பற்றி ஊடகவியலாளர் ...

Read More »

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு மேலும் பதவியுயர்வு!

போர்க்குற்றச்சாட்டுக்களினை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார்.இவரது வதிவிடத்தினில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையினில் மரணித்தமை தொடர்பினில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையினில் ஒய்வு முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரில் 58 ...

Read More »

கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?

அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா? தமிழர்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் ஆச்சரியம் தருபவைகளாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் சில செய்திகளையும் அவற்றின் பின்னணிகளையும் அவை தொடர்பான பொதுமக்களின் வியாக்கியானங்களையும் இந்தப் பத்தியில் நோக்க வேண்டிய தேவையுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை ...

Read More »

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை, எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காது, தமிழரசு கட்சியில் இருந்தவாறே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே ...

Read More »

மீத்தொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல

ஆட்சியாளர்களின் பொறுப்பபற்ற நடவடிக்கைகளும் துஸ்பிரயோகங்களும் எல்லை கடந்த நிலைக்குச் சென்றுள்ளன. இதற்கு விலையாக நாட்டு மக்கள் தமது உயிர்களை அநியாயமாக பறிகொடுக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீத்தொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல. இது எமது ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்றவர்களின் கவனயீனங்களாலும், துஸ்பிரயோகங்களினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அனர்த்தமாகும். பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்துவந்த மீத்தொட்டமுல்லை பகுதியில் ...

Read More »

மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது! – சம்பந்தன்

எமது மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இராணுவத்தளபதி, ஏனைய படைகளின் தளபதிகள் மற்றும் கூட்டமைப்பின் ...

Read More »

உரிமைகள் மறுக்கப்பட்டால் போராடுவோம் -பொ.ஜங்கரநேசன்!

தமிழர்களுக்கான உரிமைகள் மீண்டும் மறுக்கப்படுமாக இருந்தால் மீண்டும் இந்த மண் இரத்த களரியை எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவில் நேற்றைய தினம் நடைபெற்ற அம்பலவாணர் கலையரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்சியாளர்களை நல்லாட்சி என்று நாங்களே கூறி மக்களிடம் தவ றான அபிப்பிராயத்தை நாங்களே உருவாக்கியுள்ளோம். எங்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பிரச்சினைகள் இந்த மண்ணில் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யாரும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம். ...

Read More »

கால இழுத்தடிப்பு வேண்டாம் – யாழ்.ஆயர்!

உண்மையை மூடி மறைக்கும் நோக்கிலோ அல்லது அரசியல் லாபம் கருதியோ காலத்தை இன்னும் இழுத்தடிக்காமல் விரைவாக செயற்படுங்கள் என இலங்கை அரசிடம் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தழிழ் புத்தாண்டு ஈஸ்ரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியினில் மேலும் தெரிவிக்கையினில் 2017ஆம் ஆண்டிற்குரிய தமிழ்  சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அன்பர்கள் அனைவர்க்கும்; இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை முதலில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று தசாப்த கால போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்து ...

Read More »

மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் நாமும் உடன்படுகிறோம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவில் நடத்த வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் தாமும் உடன்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்த கலந்துரையாடலொன்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) இரவு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இதன்போது புதிய அரசமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தாமும் அதே நிலைப்பாட்டிலேயே காணப்படுவதாக ...

Read More »

22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் பொசுக்கிய சிறீலங்கா இராணுவத் தளபதி!

சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக் காலம் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்றது. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் நாள் 55வயதையடைந்த லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு முதலில் ஆறு மாதங்களும் பின்னர் ஒன்றரை வருடங்களும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இவருக்கு மீண்டும் ஆறு மாதகாலம் ...

Read More »