Tag Archives: ஆசிரியர்தெரிவு

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலை தாண்டி நிலஅளவைத் திணைக்களத்தினரை விரட்டியடித்த மக்கள்

கடற்படை புலனாய்வாளர்கள், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி இன்றைய தினம் மாதகல் கிழக்கு ஜேஃ150 கிராம சேவையாளர் பிரிவில் குசுமான்துறை பிரதேசத்திலுள்ள அக்போ இரண்டு கடற்படை தளத்திற்கான காணி சுவிகரிப்பு முயற்சி மக்களின் கூட்டு முயற்சியால் முறியடிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் காணி அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தையும் குறித்த காணிக்குள் இறங்க விடாமல் குறித்த காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பை தமது வெளிப்படுத்தினர். குறித்த பிரதேசத்தில் இருந்து நில அளவை திணைக்களத்தினர் விலகி இருந்தாலும் சற்று தூரத்தில் ...

Read More »

Omicron வைரஸ் திரிபு: ஆஸ்திரேலிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

• சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து Omicron வைரஸ் திரிபுக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. • திரிபடைந்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள ஒன்பது நாடுகளில் இருந்து வந்த 54 பயணிகள், 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். • சுகாதார அதிகாரிகள் பிரதமர் Scott Morrison-இடம் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாகவும், தற்போதைய நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

Read More »

ஓமைக்ரான் ஆபத்தானதா? உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ள ஐந்து முக்கியத் தகவல்கள்

ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) கண்டறியப்பட்டுள்ளது. ‘ஓமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இது தொடர்பான WHO அறிக்கையில் ...

Read More »

யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்படவில்லை! – நாவாந்துறை பங்குத்தந்தை விளக்கம்

யாழ் கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். புனித அந்தோணியார் சிற்றாலயத்திலுள்ள சொரூபங்கள் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலை செய்தவர் ஏற்கனவே எமக்கு அறிமுகமானவர். அவர் ஒரு மனநோயாளி. நீண்ட காலமாக இந்த ஆலயத்திலேயே தங்கியுள்ளார். நாங்கள் நீண்ட முறை அவர்களை ...

Read More »

யாழில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தம்!

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெறவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பினால் இன்று கைவிடப்பட்டது. மாதகல் கிழக்கு ஜே /150 கிராம அலுவலர் பிரிவில் மூன்று பரப்புக் காணியை சுவீகரிக்க வந்த நில அளவை திணைக்களத்தினரை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது “நமது இந்த காணிகளில் கடல் அரிப்பு ஏற்பட்ட போது இந்த காணியை பாதுகாக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எங்களுடைய வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் ...

Read More »

ஆஸ்ரேலியா பிரிஷ்பனில் இடம்பெற்ற மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடரினை லெப்ரினன்ற் பொற்தேவன் அவர்களின் சகோதரன் திரு. டெனிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடி ஏற்றப்பட்டு, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை திரு. லெபோன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்த திரு. ரவி அவர்கள் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரை லெப்ரினன்ற் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி திருமதி. பானுமதி அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ...

Read More »

முள்ளிவாய்க்காலில் ஊடவியலாளர் மீது இராணுவம் தாக்குதல்

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

Read More »

முதல் மாவீரன் சங்கர் இல்லத்தில் ஆரம்பமாகியது மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் உள்ளிட்டோர் மாவீரன் லெப்.சங்கர் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

Read More »

ஆஸ்திரேலியா: Orphan Relative விசா: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கென பல விசா பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று Orphan Relative விசா(subclass 117) ஆகும். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள் என்பதைப் பார்ப்போம். ஏனைய ஆஸ்திரேலியா விசா பிரிவுகளைப் போலவே Orphan Relative விசாவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்பவர்கள் மாத்திரமே இவ்விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெறுவர். இதன்படி வெளிநாடு ஒன்றில் பிறந்த குழந்தையொன்றின் பெற்றோர் இறந்துவிட்டால், அல்லது காணாமல்போய்விட்டால் அல்லது பெற்றோரால் அந்தக் குழந்தையை பராமரிக்க முடியாத நிலை காணப்பட்டால், அந்தக் குழந்தை ...

Read More »