Tag Archives: ஆசிரியர்தெரிவு

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிப்பார்களாம்

எதிர்காலத்தில் அமைய உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் இந்திய இராணுவத்தினரையே வெறும் 2500 பேரை அப்போது கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தினார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை நாம் முழுமையாக வரவேற்போம். என்னை கொலை செய்ய வந்த நபரையியும் விடுதலை செய்ய ...

Read More »

சஹ்ரானின் பாசறையில் பங்கேற்ற இளைஞன் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டின் கீழ், மற்றுமோர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல – ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவல் துறை , பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹாசிமினால் ஹம்பாந்தோட்டையில் நடத்திச் செல்லப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சிகளை சந்தேகநபர் பெற்றுள்ளதாக தெரிவித்த காவல் துறை  ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை  அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ, சந்தேகநபரை தடுத்து ...

Read More »

ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றி உள்ளார். ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும். உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுகிறது என ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ...

Read More »

எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்’: அகதிகளுக்காக போராடியவர்கள் குறித்து தமிழ் அகதி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். “எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பிலிருந்து என்னுடைய சில நண்பர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றி எங்களது விடுதலைக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கே உரித்தானது. அவர்களின் உதவியை எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்,” என டீவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார் தனுஷ் செல்வராசா எனும் இலங்கைத் தமிழ் அகதி.

Read More »

ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு

லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவிகிதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து இடதுசாரி கட்சியான சுதந்திர ...

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சி…

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று மாலை (02)ஆரம்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு நீதிவானின் உத்தரவிற்கு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி புலிகள் அமையத் தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டது.எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை இன்றையதினம் (02) வரையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நீதிமன்றம் குறிப்பிட்ட ...

Read More »

“தமிழர் தாயகம்” என அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை!

இலங்கை பாராளுமன்றத்தில் “தமிழர் தாயகம்” என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச பாராளுமன்றப் பிரதிநிதிகள் அவற்றை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியிருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த கௌரவ வேலு குமார் பா.உ அதனை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். கிளப்பப்பட்ட எதிர்ப்புகள் பற்றி அவர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. இந்த நாடு ஒரு சிங்கள நாடு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்ற கேள்வின்கு இல்லை. நான் அவ்வாறு ஏற்கவில்லையென தெரிவித்துள்ளார் நா.உ சி.வி.விக்கினேஸ்வரன். முதலில் இது ஒரு சிங்கள நாடல்ல. சிங்களவரைப் ...

Read More »

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கும் முடிவை டிசம்பர் 15 வரை ஒத்திவைத்த ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் இங்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இந்நடவடிக்கையை மேலும் இரு வாரங்களுக்கு அதாவது டிசம்பர் 15 வரை பிற்போடுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Read More »

ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன?

தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் அங்குள்ள ‘காவ்டெங்’ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

Read More »

மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுங்கள்

மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை அரசு இந்தியாவிடமே கொடுக்க வேண்டும். மாறாக சீனாவிடம் கொடுத்தால் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். இதுவே எமது நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்பவர். மன்னாரில் இருக்கின்ற எரிவாயு ...

Read More »