Tag Archives: ஆசிரியர்தெரிவு

சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதா? இல்லையா?

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீடிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனவர மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் வரை தற்போதைய தடை உத்தரவை நீடிப்பதாகவும் அவர் உத்தரவிட்டார். கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் ...

Read More »

கப்பல் விபத்து – இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவன உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாக செலுத்த உடன்பட்டுள்ளது. குறித்த பணம் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற ஜூன் மாதம் 31 ஆம் திகதி முதல் மாசடைந்த கடல் மற்றும் கடலோர பகுதியை சுத்தம் செய்வதற்காக மாத்திரம் குறித்த பணம் செலவிடப்படவிருப்பதாக. சூழல் பாதுகாப்பு ...

Read More »

சிட்னி விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராக பணிபுரிந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆன்டனி அப்பாத்துரை ஒரு பாரிஸ்டாவைக் காதலிப்பதாகக் கூறி, அவளது ஆடைகளைப் பிடித்து இழுத்து, முத்தமிட முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 73 வயதான குற்றவாளி, ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவ்வாறான முறைகேடான நடத்தையில் ஈடுபட்டமைக்காக 2022 டிசம்பர் 2022 வரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

ஆஸ்திரேலியா: வெளிநாடுகளில் Sinopharm தடுப்பூசி போட்டுள்ள பெற்றோர் இங்கு வருவதில் சிக்கல்!

வெளிநாடுகளில் உள்ள ஆஸ்திரேலியர்களின் நெருங்கிய குடும்பத்தினர் அங்கு சில வகை கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டிருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் போது கட்டாயம் விடுதியில் தனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும்.

Read More »

பெண்கள் மீதான தாக்குதல் சாத்தானுக்கு சமமானது- போப் பிரான்சிஸ்

பெண்கள் தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மீண்டு வரவேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் இத்தாலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 4 பேருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் போப் ஆண்டவரிடம் தங்களது பிரச்சினைகள் பற்றி பேசி ஆலோசனைகளை கேட்டனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இத்தாலி பெண் ஜியோவானா என்ப வர் தனது நிலை பற்றி கூறினார். இதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதில் அளித்து பேசியதாவது:- பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து ...

Read More »

ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடப்போவதில்லை…

ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலையில் உள்ள அரசியல்வாதிகள் உருவாக்குகின்ற கதை இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் காய்கறிகளிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளிற்கு இரண்டுமாதங்களிற்குள் தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து உரக்கப்பல் வந்தவேளை பிரச்சினை எழுந்தது அதன் காரணமாகவே கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் தராதரத்தின் கீழு; உரம் மீள உற்பத்தி செய்யப்பட்டு எங்களிற்கு விநியோகிக்கப்படும் அதற்கு நாங்கள் பணத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

NSW மாநிலத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தல்!

NSW மாநிலத்தில் சமூகப்பரவல் மூலம் புதிதாக 2501 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் தொற்று காரணமாக எவரும் மரணமடையவில்லை. NSW மாநிலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து அங்கு முகக்கவச கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. எனினும் மாநில Premier Dominic Perrottet இக்கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. புதிய Omicron திரிபு அதிகளவில் பரவும்தன்மை கொண்டதாக இருப்பதால்,  அவசர நடவடிக்கை தேவை என Westmead மருத்துவமனையின் immunologist Dan Suan தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை வளர்ச்சி 2024/25 இல் 1.4 சதவீதமாக உயரும் எனவும், 2021/22 இல் வெறும் 0.3 சதவீதமாகவே ...

Read More »

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் 2021-ம் ஆண்டு வரி தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக மாறுவார் எனத் தெரிகிறது. உலகின் ப ணக்காரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.2.11 லட்சம் கோடி. எலான் மஸ்க் நடத்தும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி டாலர்களாகும். இதில் 1400 கோடி டாலர்களை எலான் மஸ்க் தன்வசம் வைத்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் எலான் மக்ஸ் ஏறக்குறைய ...

Read More »

வைத்தியர்கள் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

இலங்கை  ரீதியில் நாளை (21) காலை 08 மணி தொடக்கம் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் ஐந்து மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சிறிலங்கா ஜனாதிபதியின் விசேட பணிப்புரை

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  மற்றும்  நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு விடுக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ பணிப்புரை விடுத்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் அந்நியச் செலாவணி மற்றும் நாணயக் கையிருப்பு நிலவரம் குறித்து விசாரிப்பதற்காக இருவரும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், மத்திய வங்கி ஆளுநர் ...

Read More »