Tag Archives: ஆசிரியர்தெரிவு

தொற்றுள்ளவர் எண்ணிக்கையில் NSW மீண்டும் உச்சம்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,431 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் 12 பேர் மரணமடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொற்றுள்ளவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என Premier Berejiklian எச்சரித்தார். தொற்று கண்ட 979 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள். 63 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என மாநில சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

Read More »

ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி

சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது. ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தைப்பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி. ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ந் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதையொட்டி இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் ...

Read More »

சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது!

வாழ்க்கையில் பல தடைகளை தாண்டியவரை ஆனால் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது என யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் மரணம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கருத்துவெளியிட்டுள்ளார் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சமூக விடயங்கள் குறித்த பிரகாஸ் ஞானப்பிரகாசத்தின் கரிசனை என்பது அவை குறித்துஅறிக்கையிடுவதுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை,அநீதி வன்முறைகளை எதிர்கொள்பவர்களிற்கு ஆதரவளிப்பதற்காக அவர் குரல் கொடுத்தார் – பலரை தொடர்புகொண்டார். இவ்வாறான இழப்புகள் ...

Read More »

கொரோனாவுடன் இணைந்து ஜனநாயக நெருக்கடி நிலவுகிறது!

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர, நாட்டில் ஒரு ஜனநாயக நெருக்கடி நிலவுவதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். சமூகத்தில் பல நெருக்கடிகள் உள்ள நிலையில், கொவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன பிரதானமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள் உட்பட பல சிக்கல் நிறைந்த பகுதிகள் ஒரு ஜனநாயக சமூகமாக இணைந்து வாழும் போது தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதாரத் துறை, பொருளாதாரத் ...

Read More »

தன்னந்தனியே அடைக்கலம் தேடி அவுஸ்திரேலியா சென்றுள்ள ஆப்கான் சிறுவர்கள்!

ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார். பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்கள் தனியாக அவுஸ்திரேலியா வந்துள்ளனர் என அமைச்சர் கரென் அன்ரூஸ் (karen andrews)தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பதை தாங்கள் பார்த்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது அவுஸ்திரேலியாவிற்கு தனியாக வந்த சிறுவர்ககளை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்ட அவர், மேலும் பலர் ...

Read More »

நியூ சவுத் வேல்ஸ் -70 சதவீதமானோர் தடுப்பூசியின் முதல்சுற்றை போட்டுள்ளனர்!

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,288 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தடுப்பூசியின் முதல்சுற்றை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை இன்றுடன் 70 சதவீதமாகிறது. தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ‘வெளியில் உடற்பயிற்சி செய்ய ஒரு மணி நேரம் மட்டும்’ என்ற வரம்பு நீக்கப்படுகிறது, மற்றைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். Bega, Cooma, மற்றும் Illawarra Shoalhaven Bomaderry ஆகிய இடங்களில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

Read More »

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்

ஒரு பக்கம் உயிர்ப்பயம், இன்னொரு பக்கம் வாழ்வாதாரமின்மை என ஒவ்வொரு நாளையும் கண்ணீரில்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் கடத்திச்சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகி இருக்கிறது. 20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரிதாபம் நேர்ந்திருக்கிறது. துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலிபான் ஆளுகையில் நமது உயிர்களுக்கும், ...

Read More »

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கு நிபந்தனைகளை முன்வைத்தார் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் ஜி.எல்.பீரிஸை சந்திக்கத் தயார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விடுத்த அழைப்பை ஏற்க சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையான முறையில் இடம்பெறுகின்றன என நம்புவதாக ஜி.எல்.பீரிஸுக்கு ...

Read More »

முடக்க காலத்திலும் நாயாற்றுக்கு படையெடுக்கும் தென்னிலங்கை மீனவர்கள்!

தற்போது கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதிக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதருவதாக நாயாற்றுப் பகுதி மீனவர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர். கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்கள் முடக்க நிலையையும் மீறி நுழைவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அழிவைத் தோற்றுவிக்கும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறு முடக்க காலத்தில் நாயாற்றுப்பகுதிக்கு வருகைதரும் ...

Read More »

ஆஸ்திரேலியா: கொரோனா காலத்தில் உணவுக்கே உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் அகதிகள்

ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. “நான் பார்க்கக்கூடிய பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் அவர்களது சட்ட அந்தஸ்து உறுதிச்செய்யப்படாததால் அரசின் Medicare அல்லது JobKeeper போன்ற நல உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுக்கு உணவு வழங்க ...

Read More »