Tag Archives: ஆசிரியர்தெரிவு

மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்டது

விக்டோரியா மிக நீண்ட காலம் முடக்க நிலையில் இருந்த நகர் என்ற பெயர் பெற்றிருக்கும் மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்ட அதே நாள், விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,189 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள். முன்னர் கணித்ததற்கு ஒரு வாரம் முன்னராகவே, அக்டோபர் 30ஆம் தேதி, விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதமாகும் என தற்போதைய கணிப்புகள் சொல்கின்றன. வெளி நாடுகளிலிருந்து நவம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர் ...

Read More »

மேடையில் ஏறி போப் ஆண்டவரிடம் தொப்பியை கேட்ட சிறுவன்

என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை சிறுவனிடம் கொடுத்தார். வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடியதை கண்டு பார்வையாளர்கள் திகைத்துப்போயினர். பின்னர், மீண்டும் போப் ...

Read More »

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த கலந்துரையாடல் இன்று!

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.இக்கலந்துரையாடலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பிலான அறிக்கைகளும் இதன்போது பரிசீலிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More »

விடுதலைப் புலிகளின் 14 முக்கியஸ்தர்களின் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது?

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் பிள்ளைகள் பலர் பலவந்தாகக் காணாமலாக்கப்பட்டதை பாராளுமன்றில் நேற்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இவ்வாறு காணாமலாக்கப்பட்ட 14 மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகள் தொடர்பான விபரங்களை சபை ஆவணப்படுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இது தொடர்பான தகவல்களை அவா் வெளியிட்டார். தம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில் ...

Read More »

மேடையில் ஏறி போப் ஆண்டவரிடம் தொப்பியை கேட்ட சிறுவன்

என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை சிறுவனிடம் கொடுத்தார். வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடியதை கண்டு பார்வையாளர்கள் திகைத்துப்போயினர். பின்னர், மீண்டும் போப் ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அதிகாரத்திற்கு வருவதற்காக பயன்படுத்தியவர்களால் நீண்டநாள் அதிகாரத்தில் இருக்க முடியாது

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட பெரும் அழிவை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பயன்படுத்தியவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்க மாட்டார்கள் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அது சாபக்கேடாக மாறியுள்ளது,எவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது பலர் வாழ்வதற்காக உழைக்க முடியாத நிலை காணப்படுகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலம் முதல் இலங்கை சபிக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றதுஎவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத ...

Read More »

மட்டக்களப்பில் தமிழர்கள் வாழக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட குடியேற்றங்கள்

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். எனவே இந்த சிங்கள குடியேற்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பிஇஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பிஇஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற காரியலத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். வாகரை ...

Read More »

ஊடகவியலாளர் நடராசாவின் உயிர் காக்க உதவுமாறு கோரிக்கை

  இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும் பத்திரிகையாளருமான ரி. நடராசா(நடா) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ராவய பத்திரிகையின் ‘ தமிழ் செய்தித்தாளாகக் கருதப்படும் ஆதவன் செய்தித்தாளில் பத்திரிகையாளராகவும் நடராசா பணியாற்றினார். இவரது மைலோமா (Multiple Myeloma Treatment) சிகிச்சைக்காக 5.3 மில்லியன் ரூபா தேவைப்படுவதால் அவரது உயிர் காக்க பரோபகாரிகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றனர். கணக்கு விபரம் ரி.நடராசா கணக்கு எண்: 8012264946 கொமர்ஷல் வங்கி, பிரதான வீதி (Main Street) கொழும்புக் கிளை.

Read More »

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் ...

Read More »

தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை – கனிமொழி

தமிழர்களுக்கு யாரும், யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொமெட்டோ சர்ச்சை தொடர்பாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பெருநிறுவனங்களாக சொமெட்டோ, ஸ்விக்கி ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக். 18) சென்னையைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமெட்டோ மூலம் உணவகத்தில் காம்போவாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முழுமையாக உணவு டெலிவரி ஆகாததால் சொமெட்டோ கேர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை ...

Read More »