சிறிலங்கா தம்பதியை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை கோரிய சிறிலங்கா தம்பதியினர் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எரங்க ரணசிங்க ஆராச்சிகே என்ற சிறிலங்காவைச் சேர்ந்தவரின் குடும்பமே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தம்பதியினர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் குறித்த தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக பாரியளவில் நிதி செலவிட்டுள்ளதாகவும், இருப்பினும் அவை எவ்வித பலனையும் கொடுக்கவில்லையெனவும் கூறப்படுகிறது..