இந்தியா – அவுஸ்திரேலியா மோதும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் நாளை

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில்  (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.

பெங்களூரில் நடந்த 4-வது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 21 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.