அவுஸ்திரேலியாவுக்கு அதிரடி எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா!

வடகொரியாவின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவுஸ்திரேலியா தனது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்கா பென்டகனிலுள்ள அணுஆயுத மற்றும் ஏவுகணை எதிர்ப்புப்பொறிமுறை குறித்த முன்னாள் உயர் அதிகாரி Dr Brad Roberts கூறியுள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியா மீது வடகொரியாவின் ஏவுகணை எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.