அவுஸ்ரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி

இந்து கடவுளான விநாயகர் உள்பட பல மத கடவுள்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டது.
இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன.
இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் உள்ள ‘ஏ.எஸ்.பி.’ நிறுவனத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. அதன் மீது விசாரணை நடத்திய இந்த நிறுவனம் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை செய்ய முடியாது என மறுத்து விட்டது.
இந்தநிலையில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில் திரளான இந்து மக்கள் கலந்து கொண்டனர். ‘ஏ.எஸ்.பி.’ நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியப்படி சென்றனர்.