அவுஸ்ரேலியாவில் வங்கிக்கு தீ வைத்த புகலிடக்கோரிக்கையாளர்?

மெல்பேர்ன், Springvale-இலுள்ள வங்கிக்கு தீ வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் இந்த வழக்கை எதிர்கொள்வதாக தெரியவருகிறது.

இந்த தீ விபத்தில் 12 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி Springvale Commonwealth வங்கிக்குச் சென்ற Nur Islam என்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர், வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்தமையால் ஆத்திரமடைந்து குறித்த வங்கிக்கு தீ மூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் வங்கிக்கு சுமார் 3 மில்லியன் டொலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நபர் மீது 108 பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணைகள் நடைபெறுகின்றன.