அவுஸ்ரேலியாவில் தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

அவுஸ்ரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் 30ம் திகதி (சனிக்கிழமை) தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மாலை 6 மணிக்கு, St Jude’s Primary School Hall, 53 George St, Scoresby இல் தியாகி தீலீபனின் 30ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

உணர்வுப் பூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமான இந்த அறிவிப்பினை விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thiyagi-Thileepan-yaalaruvi