அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முயன்றால்?

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முன்னர் வெளிநாட்டு விமான நிலையங்களில் வைத்து, சந்தேகப்படும்படியான நபர்களை தடுத்து நிறுத்தும் பணியில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையின் Border Force ஈடுபடுகின்றது.

குறிப்பாக ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள, சில சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வருபவர்களை தடுத்தும் நிறுத்தும் பணி தொடர்கிறது.

அவுஸ்திரேலிய Border Force-இன் Airline Liaison Officers – சிறப்புப் பிரிவு இயங்கிவருதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.

இதன்மூலம் தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்கள், அவுஸ்திரேலியாவுக்குள் வர முன்னரே தடுத்துநிறுத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.