அவுஸ்ரேலியக் குடியுரிமைச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா?

அவுஸ்ரேலியாவில் குடியுரிமை பெறுவதைக் கடினமாக்கும் அரசின் சட்ட முன்வடிவு, பலரால் மீளாய்வு செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் குடியுரிமை பெற அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அத்துடன் அவுஸ்ரேலிய விழுமியங்கள் குறித்த மேலதி மதிப்பீடு, மற்றும் பல்கலைக்கழக நிலை ஆங்கிலப் பரீட்சையில் தேர்ச்சி என்பன முன்மொழியப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, மற்றும் செனட் சபையில் இதன் எதிர்காலம் குறித்த கேள்வி என்பன இந்த சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.