சென்னை சென்றடைந்த அவுஸ்ரேலிய அணி!

இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சென்றடைந்தது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது.

இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அவுஸ்ரேலிய அணி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தைசென்றடைந்தது. பின்னர், அவர்கள் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். இதனால், அங்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.