வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்!

நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்

நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்

நான் பிறந்தேன் கனவுடன்

வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்

நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த

நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்

நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க

நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.

தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.

பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

 

– மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை வலியுறுத்த

அமரர் அப்துல் கலாம் கூறிய கவிதை