எனது கணவர் முன்னாள் போராளி அல்ல!-மனைவி டெனீசியா

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் நேற்று (25 ) காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர் யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபரின் மனைவி டெனீசியா தனது கணவர் முன்னாள் போராளி அல்ல என்பதை தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர் புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்றும் புங்குடுதீவு பேரூந்து சாரதி எனவும் மனைவி தெரிவித்துள்ளார்.