சவேந்திரசில்வாவை நீதிமன்றிற்கு அழைக்க மறுப்பு!

இனஅழிப்பு போர்க்குற்றவாளிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக முல்லைதீவு நீதிமன்றிற்கு அழைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையினை முல்லைதீவு நீதிபதி நிராகரித்துள்ளார்.

இறுதி யுத்த காலத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பினில் வவுனியா மேல்நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான ஆரம்ப கட்ட விசாரணைகள் முல்லைதீவு நீதிமன்றினில் நடைபெற்றுவருகின்றது.

சுரணடைந்தவர்கள் தொடர்பாக அப்போது அங்கு கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவிற்கே தெரியுமென கூறப்பட்டிருந்த நிலையினில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடும் சட்டத்தரணி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக இணைந்து கொள்ளவும் நீதிமன்றினில் ஆஜராக்கவும் கேட்டிருந்தார்.அதனையே இன்று முல்லைதீவ நீதிபதி நிராகரித்துள்ளார்.

இதனிடையே கஜபா காலாட்படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக கடந்த மாதம் சவேந்திரசில்வா பதவியுயர்வு பெற்றிருந்தார்.