பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! புதிதாக குற்றங்கள் சேர்ப்பு!

74 பக்கங்களை கொண்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பல புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் அவர்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்.

அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதியான இடங்களை அழிப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த சட்டம் பழைய பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை தவிர இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் செயற்படுவது குற்றமாகும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில், கடத்தல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பயங்கரவாத குற்றங்களாகும்.

இந்த புதிய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பயங்கரவாத செயற்பாடுகளை விசாரிப்பதற்காக பொலிஸ் மா அதிபருடனான பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் நிறுவ வேண்டும், அதற்கு விசேட விசாரணை குழு ஒன்றை உள்ளடக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக பயங்கரவாத செயற்பாடு தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் குறித்து இந்த நாட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் உடனடியாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.