விரைவில் மாவையின் சுயசரிதை!

இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தனது வாழ்க்கைப்பயணத்தை ஆவணமாக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பில் சக அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் தன்னை வலியுறுத்திவருவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இருளுள் இதய பூமி எனும் மணலாறு நில சுவீகரிப்பு தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளிடுகையில் மணலாறின் ஒவ்வொரு அங்குலத்திலும் தனது காலடி பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனது சிறைவாழ்வு உள்ளிட்ட அரசியல் பயணத்தை ஆவணப்படுத்த சுயசரிதை நூலொன்றை எழுதவுள்ளதாக தெரிவித்தார்.

இதே வேளை தமிழ் மக்கள் தந்த ஆணைகளின் அடிப்படையில், எங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கமெனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாம் அமைச்சுப் பதவிகளுக்காகப் போராடியவர்கள் அல்லர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.