அவுஸ்திரேலிய பப்புவா நியுகினி தடுப்பு முகாமில் மாவீரர் நாள் நிகழ்வு

அவுஸ்திரேலிய அரசால் பப்புவா நியுகினி  தீவில் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டுள்ளார்கள்.

மிகவும் நெருக்கடியான சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலர் விடுதலை போராட்டத்தில் மரணித்துள்ளதாகவும் அவர்களை நினைவுகூருகின்ற சந்தர்ப்பம் கிடைத்தமை நல்ல விடயம் எனவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாக தமது ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 – 11 – 2016 அன்று தாயக நேரப்படி மாலை ஆறு மணிக்கு இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு மலர் அஞ்சலி செய்ததுடன் அகவணக்கமும் மேற்கொண்டனர்.

img_0341