கணவரை வில்லனாக களமிறங்கி விட்டுள்ளார் சிம்ரன்

திருமணம் செய்து கொண்ட பல மாஜி நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் பிசியாகி வருகின்றனர். ஆனால் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரனுக்குத்தான்  மீள் வருகை  பெரிதாக அமையவில்லை.

ஆஹா கல்யாணம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

அதோடு தனது கணவர் தீபக்கையும் முன்னணி நடிகர்களின் படங்களில் அறிமுகம் செய்ய சான்ஸ் கேட்டு வந்தார் சிம்ரன். ஆனால் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்காக காத்திருந்து காலம் கடத்த வேண்டாம் என்று இப்போது தனது கணவர் தீபக்கை ஓடு ராஜா ஓடு என்ற படத்தில் வில்லனாக களமிறங்கி விட்டுள்ளார் சிம்ரன்.

நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர்ராஜா என்ற இரட்டையர் இயக்கும் இந்த படத்தில் ஜோக்கர் குருசோம சுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர்களுடன் சாருஹாசன், நாசர் போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கும் இந்த படம் காமெடி கதையில் உருவாகியிருக்கிறது.