பிரபல பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணம்

பிரபல கிராமிய பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் இசைப் பாடகரும், தமுஎகச திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமாக இருந்தவர் பாடகர் சங்கை திருவுடையான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்தம் உரிமைகளுக்காகவும் இரவுப் பகலாக தெருத் தெருவாகப் பாடித்திரிந்தவர் திருவுடையான்.

நேற்று இரவு(28) திருவுடையான், சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடிவிட்டு காரில் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே, முன்னே சென்ற லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே திருவுடையான் மரணமடைந்தார்.

அவரோடு பயணித்த அவரின் தம்பியும், ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். சாரதி உறங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.