இனி பொறுமை இல்லை! வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்ள அதிகாரம் வேண்டும் – சம்பந்தர்

அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மேலாக வளங்கல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் உள்ளடங்கிய நல்லதொரு அரசியல் தீர்வின் மூலமே நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியும்  என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து தேசிய கட்­சிகள் தமது நிலைப்­பாட்டினை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்க வேண் டும். இனி­மேலும் காலத்தை கடத்தமுடி­யாது. புதிய பாரா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்ட பின் விரை வில் தீர்வை முன்­வைப்­ப­தற்­கான தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்:

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத் தில் ஆட்­சிக்கு வரும் எந்த அர­சாங்­கமும் இனி­மேலும் காலத்தைக் கடத்த முடி­யாது.

புதிய பாரா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்ட பின் விரைவில் தீர்வை கொண்டுவரு­வ­தற்­கு­ரிய தீவிர முயற்­சி­களை வரு­கின்ற அர­சாங்கம் எடுக்கவேண்டும்.

தேர்­தலின் பின் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அர­சாங்­க­மொன்றை உரு­வாக்க வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய எமது ஆத­ரவும் மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் உத­வியும் நிச்­சயம் தேவை­யாக இருக்கும். அதுவே இன்­றைய அர­சியல் சூழ்­நி­லை­யாகும். அவ்­வாறு ஒரு சூழ்­நிலை தோன்­று­மாயின் எமது எதிர்­பார்ப்­புக்­களின் அடிப்­ப­டையில் ஆத­ரவு தர நாம் தயா­ரா­க­வுள்ளோம்.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக பெரும்­பான்மை கட்­சிகள் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வாக குறிப்­பிட வேண்டும். நாம் எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக காத்­தி­ர­மான விட­யங்­களை முன்­வைக்­க­வி­ருக்­கிறோம். தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு விட­யத்தில் இன்னும் நாம் பொறுமை காக்க முடி­யாது. தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தமிழ் மக்­களால் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய அதி­கார வலு கொண்­ட­தாக இருக்க வேண்டும். இதை பெரும்­பான்மை மக்கள் மனப்­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொள்ள வேண்டும். வேண்­டு­மாயின் ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடாத்திப் பார்த்து முடி­வுக்கு வர முடியும். காலத்தைக் கடத்­தாது விரைவில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வொன்று அர­சாங்­கத்தால் முன்­வைக்­கப்­பட வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு எத்­த­கைய தீர்வு வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்­பதை தேசியக் கட்­சிகள் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்க வேண்­டு­மென தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதி­பார்க்­கி­றது. வேண்­டு­மாக இருந்தால் நாம் முன்­வைக்­கின்ற தீர்வை பெரும்­பான்மை சமூ­கமும் சிறு­பான்மை மக்­களும் ஏற்றுக் கொள்­கி­றார்­களா? என்­ப­தற்­காக ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடாத்திப் பார்க்­கட்டும்.

ஒளிவு மறைவின் மூல­மாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் காண­மு­டி­யாது என்­பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரா­ளு­மன்ற தேர்தல் முடி­வ­டைந்த பிறகு ஆட்­சியை அமைக்­கின்ற கட்­சிகள் இந்த முயற்­சியை முன்­னெ­டுத்து செல்ல வேண்­டு­மெனக் கேட்டுக் கொள்­கிறோம்.

சர்­வ­தேச சமூ­கமும் இந்த முயற்­சிக்கு எல்லா வகை உத­வி­க­ளையும் செய்­வார்கள் என நம்­பலாம். இன்று ஏற்­பட்­டி­ருக்கும் புதிய அர­சியல் சூழலில் எல்லா மக்­களும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தீர்­வொன்றை நல்க முடி­யு­மென்று நாம் நம்­பு­கின்றோம்.

R_-Sampanthar-at-the-press-conferenceதேர்தல் நடந்து முடிந்த பின்பு யார் ஆட்சி அமைப்­பார்கள்? பல­முள்ள ஒரு அர­சாங்கம் அமை­யுமா? இல்­லை­யென்­பது பற்றி ஊகத்தின் அடிப்­ப­டையில் எதையும் நாம் கூற முடி­யாது. ஆனால் இன்­றைய அர­சியல் சூழ்­நி­லையைப் பார்க்­கின்ற போது ஒரே அடிப்­ப­டையில் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக சிந்­திக்­கக்­கூ­டிய சக்­திகள் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெறக்­கூ­டிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பு உரு­வா­க­லா­மெ­னவே நாம் கரு­து­கிறோம். சில சம­யங்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஏனைய சிறு­பான்மை கட்­சி­க­ளு­டைய ஆத­ரவு அதை அடை­வ­தற்கு தேவை­யாக இருக்­கலாம். அந்த நிலைமை உரு­வா­கு­மென்றே நான் நம்­பு­கின்றேன். அந்த எதிர்­பார்ப்பின் அடிப்­ப­டையில் தான் நாங்கள் எமது திட்­டங்­களை வகுத்துக் கொண்­டி­ருக்­கின்றோம். நடை­பெ­று­கின்ற நகர்­வு­களை அவ­தா­னித்து அதற்கு ஏற்ற வகையில் பொருத்­த­மான உபா­யங்­களை நாம் கையாள்வோம்.

8 மாவட்­டங்­க­ளிலும் போட்டி

வட­கி­ழக்­கி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போட்­டி­யி­ட­வுள்­ளது. அதற்­கு­ரிய சகல ஏற்­பா­டு­க­ளையும் தீவி­ர­மாக மேற்­கொண்டு வரு­கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டு சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளது. வேட்­பாளர் நிய­ம­னங்கள் சம்­பந்­த­மாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டையே பல சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்று வரு­கின்­றன. சுமு­க­மான முடிவு எல்­லோரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய விதத்தில் விரைவில் காணப்­படும்.

தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக நீண்ட கால­மாக ஒரு முடிவு காணப்­ப­ட­வில்லை. ஆனால் 1987ஆம் ஆண்டு இந்­திய இலங்கை ஒப்­பந்தம் நிறை­வேற்­றப்­பட்ட பின் அவ்­வொப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்ட விட­யங்­களை அடை­வ­தற்­காக பல்­வேறு முயற்­சிகள் இடம் பெற்­றுள்­ளன. முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா பிரே­ம­தாச சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்கா மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் முன்­னெ­டுப்­புக்கள் இடம்­பெற்று வந்­துள்­ளன.

ஆனால் யாரு­டைய காலத்­திலும் தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை. துர­திஷ்ட வச­மாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் ஏற்­பட்ட முன்­னேற்­றங்கள் பின்­ன­டைவு கண்டு தீர்வை அடை­வது ஒரு சிக்­க­லான விட­ய­மாக மாற்­ற­ம­டைந்­தது.

தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டாத விட­யமும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஆட்சி மாற்­றத்­துக்­கான முக்­கி­ய­மான கார­ண­மாக இருந்­துள்­ளது.

வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வது

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் விடயம் சம்­பந்­த­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சர்­வ­தேச சமூ­கத்­துக்கு வழங்­கி­யி­ருந்த வாக்­கு­று­தி­களைக் கூட நிறை­வேற்­ற­வில்லை. எல்லா விட­யங்­க­ளையும் குழப்ப முயன்றார் அவ­ரு­டைய தோல்­விக்கு அவையே முக்­கி­ய­மான கார­ண­மாக அமைந்­தது.

தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால ஸ்ரீ சேன­வுடன் தீர்வு சம்­பந்­த­மாக ஆரம்ப பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தி­யி­ருந்தோம். நாம் தற்­பொ­ழுது எதிர்­பார்ப்­பது யாதெனில் பாரா­ளு­மன்ற தேர்தல் முடிந்­த­பின்பு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை அர­சாங்கம் கால தாமதம் செய்­யாமல் விரை­வாக முன்­வைக்­கப்­பட வேண்­டு­மென்­பது எமது நிலைப்­பாடும் எதிர்­பார்ப்­பு­மாகும்.

தேர்தல் விஞ்­ஞா­பனம்

நடை­பெ­ற­வுள்ள தேர்­தலை முன்­னிட்டு எம்மால் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக விரி­வாக எடுத்­து­ரைப்போம். சுருக்­க­மாக சொல்­வ­தாக இருந்தால் தமிழ் மக்கள் ஒரு தனித்­து­வ­மான இனம். எமக்­கென மொழி கலை கலா­சாரம் உண்டு. அதன் அடிப்­ப­டையில் ஒரு­மித்த நாட்­டுக்குள் மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்­களைப் பேணிப் பாது­காத்து தனிப்­பட்ட இனம் என்ற அடிப்­ப­டையில் சமத்­து­வ­மாக வாழ்­வ­தற்கு எமக்கு உரி­மை­யுண்டு. அது எமது பிறப்­பு­ரிமை. எனவே தமிழ் மக்கள் தமது அர­சியல் அபி­லா­சை­களை அடை­வ­தற்கு ஒரு­மித்து ஒற்­று­மை­யாக பிரிக்­கப்­ப­டாமல் செயற்­ப­டக்­கூ­டிய ஒரு தீர்வு தரப்­பட வேண்டும். பகிர்ந்­த­ளிக்­கப்­படும் இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்கள் கூடி­ய­ளவு வழங்­கப்­பட வேண்டும். பிராந்­தி­ய­மொன்­றுக்கு வழங்­கப்­பட வேண்­டிய சகல அதி­கா­ரங்­களும் அந்த பிராந்­தி­யத்­துக்கு வழங்­கப்­பட வேண்டும். தமிழ் மக்கள் தமது முடிவுகளே ஜனநாயக ரீதியாக நிறைவேற்றக் கூடிய வல்லமை உருவாக வேண்டும்.

இவ்வகை அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மேலாக வளங்கல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் உள்ளடங்கிய நல்லதொரு அரசியல் தீர்வின் மூலமே நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியும்.

தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வு என்பது காலதாமதப்படுத்தப்படாமல் விரைவில் கொண்டு வரப்பட வேண்டுமென்பது எமது கோரிக்கையாகும். அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற தீர்வு பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.