போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா? – ஹரிகரன்

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்­ப­டை­யுடன் கூட்டு இரா­ணுவப் பயிற்­சி­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

கடந்த அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த, இலங்கைப் படை­யி­ன­ரு­ட­னான கூட்டுப் பயிற்­சி­களே இப்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

திரு­கோ­ண­மலைக் கடலில், அமெ­ரிக்க கடற்­ப­டையின் சீல் என்று அழைக்­கப்­படும் சிறப்பு கொமாண்டோ அணி­யினர், இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருடன், பயிற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

ஜூன் 19 ஆம் திகதி தொடங்­கப்­பட்ட இந்த கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 02 ஆம் திகதி வரை தொடரும் என்று தக­வல்கள் கூறு­கின்­றன.

கடற்­ப­டையின் எஸ்.பி.எஸ். என்று அழைக்­கப்­படும், சிறப்பு படகுப் படை­யணி கொமாண்­டோக்கள், அதி­வேகத் தாக்­குதல் படகு அணியைச் சேர்ந்த கடற்­ப­டை­யி­ன­ருடன் இணைந்தே இந்தப் பயிற்­சி­களை அமெ­ரிக்கா ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

திரு­கோ­ண­மலைக் கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில், இந்த கூட்டுப் பயிற்சி நடந்து கொண்­டி­ருந்த போது, கடந்த 22ஆம் திகதி கடற்­படைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது.

இரு அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் மற்றும் ஆறு இலங்கைக் கடற்­ப­டை­யினர் பயணம் செய்த அந்தப் படகில் இருந்த ஏழு பேர் கடலில் குதித்து நீந்திக் கொண்­டி­ருந்­த­போது ஏனைய கடற்­படைப் பட­கு­களால் காப்­பாற்­றப்­பட்­டனர்.

இந்த விபத்­தினால் தான் அமெ­ரிக்க — இலங்கை கடற்­ப­டை­க­ளுக்கு இடையில் மீண்டும் இரா­ணுவப் பயிற்சி ஆரம்­பிக்­கப்­பட்ட விட­யமே வெளியில் தெரி­ய­வந்­தது.

இல்­லா­விட்டால், இந்த விடயம் சில வேளை­களில் வெளியில் தெரி­ய­வ­ராமல் கூடப் போயி­ருக்­கலாம்.

ஏதோ கார­ணத்­துக்­காக அமெ­ரிக்­காவும் இலங்­கையும், இந்தக் கூட்டுப் பயிற்சி பற்­றிய தக­வல்­களை மறைத்­தி­ருந்­தன.

இப்­போது இந்த விவ­காரம் வெளிச்­சத்­துக்கு வந்­தி­ருந்­தாலும், இந்தக் கூட்டுப் பயிற்சி பற்­றிய தக­வலை அமெ­ரிக்கா அதி­கா­ர­பூர்­வ­மாக இன்­னமும் உறு­திப்­ப­டுத்­த­வில்லை.

அமெ­ரிக்­காவின் பசுபிக் கட்­டளைப் பீடத்தைச் சேர்ந்த கடற்­ப­டை­யி­னரே இந்தப் போர்ப் பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தாலும், பசுபிக் கட்­டளைப் பீடத்தின் எந்த தகவல் மூலத்­திலும் அது­பற்­றிய குறிப்­புகள் இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

warcrime-3அது­போல, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளமோ, கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கமோ இதனை வெளிப்­ப­டுத்­தவும் இல்லை.

இதி­லி­ருந்து இந்தக் கூட்டுப் பயிற்சி பற்­றிய தக­வல்கள் வெளி­யா­வதை அமெ­ரிக்கா விரும்ப­வில்லை என்­பதை உணர முடி­கி­றது.

அதே­வேளை, இலங்கை தொடர்­பான அமெ­ரிக்­காவின் பாது­காப்புச் சார் கொள்­கையில் முக்­கி­ய­மான மாற்­றங்கள், அண்­மைய மாதங்­களில் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன.

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி கடந்த மாதம் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொள்­வ­தற்கு முன்­ன­தாக, ஏப்ரல் 19ஆம் திகதி வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாது­காப்புச் செயலர் பஸ்­நா­யக்க, கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஜெயந்த பெரேரா ஆகி­யோரைக் கொண்ட குழு­வினர், அமெ­ரிக்க கடற்­படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமா­னந்­தாங்கி கப்­ப­லுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தின் பிற்­ப­கு­தியில், இலங்கை கடற்­ப­டை­யுடன் கூட்டுப் பயிற்­சி­களை நிறுத்­தி­யி­ருந்த அமெ­ரிக்கா, தனது விமா­னந்­தாங்கிக் கப்­ப­லுக்கு இலங்கை அதி­கா­ரி­களை அழைத்துச் சென்­றது, முக்­கி­ய­மான மாற்றம் ஒன்­றுக்­கான அறி­கு­றி­யா­கவே பார்க்­கப்­பட்­டது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கொழும்­புக்­கான பய­ணத்தை அடுத்து, இரு­த­ரப்பு உற­வு­களில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­களின் விளை­வாக, அமெ­ரிக்க கடற்­படை கூட்டுப் பயிற்­சி­களை மீளவும் ஆரம்­பிக்கும் அள­வுக்கு முன்­னே­றி­யி­ருக்­கி­றது.

இலங்கைப் படை­யி­ன­ருடன், கடந்த சில ஆண்­டு­க­ளாக அமெ­ரிக்கா தனியே மனி­தா­பி­மான, அனர்த்த மீட்பு மற்றும் கடல்சார் பாது­காப்பு விட­யங்­களில் மட்­டுமே ஒத்­து­ழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்­சி­களை மேற்­கொண்டு வந்­தது.

1997ஆம் ஆண்டு தொடக்கம் பலன்ஸ் ஸ்ரைல் என்ற பெயரில், இலங்கைப் படை­யி­ன­ருடன் இணைந்து அமெ­ரிக்கா கூட்டுப் பயிற்­சி­களை மேற்­கொண்டு வந்­தது.

குறிப்­பாக, காட்டுப் போர் முறை, சிறிய குழு­வாக ஊடு­ருவித் தாக்­குதல் நடத்­து­வது போன்­ற­வற்றை இலங்கை இரா­ணு­வத்­துக்கு கற்றுக் கொடுத்­தது அமெ­ரிக்­காவின் சிறப்பு கொமாண்­டோக்கள் தான்.

இந்தப் பயிற்­சி­களின் ஊடாக உரு­வாக்­கப்­பட்­டதே இலங்கை இரா­ணு­வத்தின் ஆழ ஊடு­ருவித் தாக்கும் அணி­க­ளாகும்.

*விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்னர், இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களை படிப்­ப­டி­யாக குறைத்துக் கொண்டு வந்த அமெ­ரிக்கா, கடந்த சில ஆண்­டு­க­ளாக ஏதோ பெய­ருக்கு சில கூட்டு ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்­கை­களில் மாத்­திரம் பங்­கேற்­றது.

அண்­மைய ஆட்சி மாற்­றத்தின் பின்னர், அமெ­ரிக்­காவின் போக்கில் பெரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

warcrime-41இதற்கு வலு­வான உதா­ரணம், அண்­மையில் அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்ட, தீவி­ர­வாதம் தொடர்­பான 2014ஆம் ஆண்­டுக்­கான அறிக்­கை­யாகும்.

இந்த அறிக்­கையில், இலங்­கை­யு­ட­னான தீவி­ர­வாத முறி­ய­டிப்பு ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்கை கடந்த ஆண்டு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது என்று மட்­டுமே கூறப்­பட்­டி­ருக்­கி­றதே தவிர, எதற்­காக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது என்ற விப­ரங்கள் ஏதும் பதி­வா­க­வில்லை.

ஆனால், கடந்த ஆண்டு அமெ­ரிக்கா வெளி­யிட்ட தீவி­ர­வாதம் தொடர்­பான அறிக்­கை­யிலும், 2013 ஆம் ஆண்டில், இலங்­கை­யு­ட­னான கூட்டு ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

எனினும் அதற்­கான காரணம் கடந்த ஆண்டு அறிக்­கையில் விரி­வாக கூறப்­பட்­டி­ருந்­தது.

அதில், “உள்­நாட்டுப் போரில், விடு­தலைப் புலி­க­ளாலும், அர­சாங்­கத்­தி­னாலும், இழைக்­கப்­பட்ட கொடூ­ரங்கள் மற்றும் அனைத்­து­லக சட்ட மீறல்கள் தொடர்­பான பர­வ­லான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு இன்­னமும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. இதன் விளை­வாக, 2013இல் அமெ­ரிக்­கா­வு­ட­னான தீவி­ர­வாத முறி­ய­டிப்பு ஒத்­து­ழைப்பு மற்றும் பயிற்­சிகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.” என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த ஆண்டு அறிக்­கையில், அவ்­வா­றான காரணம் ஏதும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் எந்த நட­வ­டிக்­கையும் இலங்கை அர­சாங்­கத்­தினால் இன்­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இதனால் தான் இந்த ஆண்டு வெளி­யிட்ட அறிக்­கையில், எதற்­காக பாது­காப்பு ஒத்­து­ழைப்பு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது என்­பதை வெளிப்­ப­டுத்­தா­ம­லேயே இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்­கை­களை மீள ஆரம்­பித்­துள்­ளது அமெ­ரிக்கா.

இந்த ஒரு விட­யத்தில் இருந்து பாது­காப்பு விட­யங்கள் சார்ந்த அமெ­ரிக்­காவின் கொள்­கையில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளதை உறுதி செய்து கொள்ள முடி­கி­றது.

warcrime-1இது இலங்கைப் படை­யி­ன­ருக்கு ஊக்­க­ம­ளிக்கக் கூடிய ஒரு நட­வ­டிக்­கை­யாக அமை­யலாம்.

கடந்த காலங்­களில், குற்­றச்­சாட்­டு­க­ளுக்­குள்­ளான படை அதிகாரிகளுக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்திருந்தது. அதுபோல போர்ப்பயிற்சிகளையும் நிறுத்தியிருந்தது.

இலங்கை அரசாங்கம் இன்னமும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், அமெரிக்கா தனது பிடியைத் தளர்த்தத் தொடங்கியிருப்பது, இந்த விவகாரத்தில் இலங்கை மீதான மேற்குலக அழுத்தங்கள் குறைக்கப்படுவதாக அர்த்தப்படுத்தப்படலாம்.

அத்தகைய நிலை, போர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.

எனினும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விவகாரத்தில், அமெரிக்கா எந்தளவுக்கு உறுதியுடன் இருக்கப் போகிறது என்பது, வரும் செப்ரெம்பர் மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியாகும் போது தெரியவரும்.

– வீரகேசரி