செய்திமுரசு

தஞ்சம் கோரியவர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியுள்ள முன்னாள் கடற்படை மாலுமி

ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் உயிரிழந்த இந்தோனேசிய மற்றும் சோமாலிய தஞ்சக்கோரிக்கையாளர்களின் உடல்களை மீட்டெடுக்க வேண்டிய பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய கடற்படையின் முன்னாள் மாலுமி ஒருவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மோசமான நினைவுகளால் துன்புறுவதாகத் தெரிவித்திருக்கிறார். அகதிகளின் நிலையையும் துன்பத்தையும் அவர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தையும் கண்ட பிறகு, தஞ்சம் கோருபவர்கள் பற்றி தனது மனப்பான்மை முழுமையாக மாறிவிட்டதாக அந்த மாலுமி குறிப்பிட்டிருக்கிறார்.

Read More »

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – சீனா மிரட்டல்

பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் திகதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதைக் காரணம் காட்டி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜ்ய ரீதியாக புறக்கணிப்பதாக ...

Read More »

பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன!

1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் காணப்படுகின்றன-பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன-” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 08.12.2021 சீரற்ற உடல்நிலை காரணமாக சில விடயங்களை மேலும் அழுத்தமாக கூற இயலவில்லை. நாடாளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு ...

Read More »

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுப்பினர்களை நியமித்துள்ளார். 2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண்.12 இன் விதிகளின்படி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதியான உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜகத் பண்டார லியனாராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஒய்வு பெற்ற நீதிபதி ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாவர்.

Read More »

ஈஸ்டர் சந்தேநபர்கள் மீது கைதிகள் ​தாக்குதல்

பதுளை சிறைச்சாலையில் விசேட சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் நால்வர், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேநகபர்கள் நால்வர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சந்தேநகபர்கள் நால்வர் மீதே, கைதிகள் நால்வரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 10 ஆம் திகதியன்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள்  திணைக்களம் மற்றும் பதுளை காவல் துறை  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அன்றையதினம் இரவு உணவைப் ...

Read More »

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகார பகிர்வு எவ்வாறு அமையலாம்?

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதான முன்மொழிவுகள் குறித்து அரசியல் அமைப்பு நிபுணரான சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி சுஜாதா கமகே ஆகியோருடன் அதிகாரப் பகிர்வு – மொழி ஆகிய விடயதானங்கள்  எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் தலைப்பில்  முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு. கடந்த நல்லாட்சி ...

Read More »

ஆஸ்திரேலியா ரசிகைக்கு சர்பிரைஸ் ப்ரோபோசல் கொடுத்த இங்கிலாந்து ரசிகர்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஒரு ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகரான ராப், பிரிஸ்பேனில் நடந்து வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3-வது நாளில் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ரசிகர்களின் முன் தனது ஆஸ்திரேலிய காதலியான நாட் இடம் சர்பிரைசாக தனது காதலை வெளிப்படுத்தினார். ‘‘நான்கு வருடம் ...

Read More »

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக தலைவராக இந்தியப் பெண் நியமனம்

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 1986-ம் ஆண்டு தனது மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்தார். தற்போது, கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்துதல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பென்சில்வேனியா மாநில அறங்காவலர் ...

Read More »

கொவிட்- 19 தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்க தீர்மானம்

பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி அட்டையை உடன் வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி எதிர்காலத்தில் பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றளிக்கும் அட்டையை வைத்திருப்பதைக் கட்டாயமாக்குவதில் கொவிட்-19 தடுப்பு பணிக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

Read More »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீப்பந்தம் ஏந்தி வவுனியாவில் பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (10) காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்து நிறைவுற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்இ நீதி கிடைக்கும்வரை போரோடுவோம்இ நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன்இ பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ...

Read More »