செய்திமுரசு

71 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது

காலி சிறைச்சாலையின் 39 பெண் கைதிகளுக்கு இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் கிளிநொச்சியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு நாளை கொண்டு செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதேவேளை போகம்பர சிறைச்சாலையின் மேலும் 32 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதுடன் அவர்கள் கல்லெல்ல கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Read More »

போலி வீசா வைத்திருந்த மூவர் கைது

போலி வீசா வைத்திருந்த மூவரை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ள தாக தெரியவந்துள்ளது. போலியான வீசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்குச் செல்ல முற்பட்ட 03 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் குடி யகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தாகத் தெரியவந்துள்ளது.

Read More »

குவாண்டம் உலகத்தில் ரகசியங்களைப் பாதுகாப்பது எப்படி?

மற்றவர்களுடன் நாம் நிகழ்த்தும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் இருவரின் அனுமதியில்லாமல் மூன்றாவது நபர் அதனைப் படிக்க முடியாது. இதற்குத் தரவுகளைச் சங்கேதமாக்குதல் (encryption) என்று பெயர். அகல்யா என்ற முதல் நபர் பாபு என்ற இரண்டாம் நபருக்குச் சங்கேதப்படுத்தப்பட்ட தகவலை அனுப்புகிறார். பாபு மட்டுமே அந்தச் சங்கேதத்துக்கான திறவுகோலைக் கொண்டிருக்கிறார் என்றும், கதிர் என்ற மூன்றாவது நபர் இங்கே ஒரு பரிவர்த்தனை நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், அதில் அவர் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்றும் அகல்யா எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள ...

Read More »

நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டார் இவன்கா டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுள்ள இவன்கா அவர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ அல்லது எங்கள் சட்ட அமுலாக்களை அவமதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இவன்காவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் அதனை நீக்கியுள்ளார். டிரம்பின் ஆதரவாளர்களால் ...

Read More »

வடக்கில் இன்று 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தைச்  சேர்ந்த 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ தேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதாகவும் ...

Read More »

உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபாருங்கள்

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு  சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதற்கமைய, ஆணைக்குழுவின்www.election.gov.lk  என்ற உத்தியோகபூர்வ  இணையத்தளத்தில் பிரவேசிக்குமாறு பொதுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அறிந்தால், உடனடியாக உங்களது கிராம அலுவலரிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையாயின் 0112860031 அல்லது  0112860032 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More »

பெருந்தொற்றுகளைத் தடுக்க என்ன வழி?

ஐக்கிய நாடு அவையின் சூழலியல் அமைப்புக்கான சமீபத்திய கருத்தரங்கில் தொற்றுநோய்ப் பரவலில் சூழலியல் சீர்கேடுகளின் பங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முடிவில், “இத்தனை வருடம் தொடர்ச்சியாக நடந்த சீர்கேடுகளின் மோசமான விளைவுகளை இனிதான் நாம் சந்திக்கவிருக்கிறோம். கரோனா என்பது அதன் ஆரம்ப நிலை மட்டுமே; இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் நான்கைந்து புதிய தொற்றுநோய்கள் உருவாகலாம். அதில் ஒன்று கரோனா போன்று சர்வதேசத் தொற்றுநோயாக மாறலாம்” என அறிக்கை விட்டிருக்கிறது. “சுற்றுச்சூழல் மீது சமீப காலங்களில் மனிதர்கள் நிகழ்த்திவரும் மிக மூர்க்கமான தாக்குதல்களின் விளைவு இப்படித்தான் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்;கள் கலவரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது என அகதியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு வருடமாக முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோய் ...

Read More »

இலங்கை பயன்படுத்தவுள்ள மருந்து எது?

இலங்கை பயன்படுத்தவுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஜனவரி 11ம் திகதிக்கு முன்னர் மக்களிற்கு தெரியப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள மருந்து மற்றும் அதனை வழங்குவதற்கான நடைமுறைகள் குறி;த்து மக்களிற்கு 11 ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் மருந்தினை கொள்வனவுசெய்யும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கு பொறுப்பினை ஜனாதிபதி லலித் வீரதுங்கவிற்கு வழங்கியுள்ளார்.

Read More »

யாழ். கல்லுண்டாயில் சுழல் காற்று; 9 வீடுகளுக்கு சேதம்

யாழ். கல்லுண்டாயில் இன்று வீசிய சுழல்காற்று காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இன்று(6) பிற்பகல் 1 மணியளவில் வீசிய சுழல் காற்றினால் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் ஜே – 136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இச்சுழல் காற்றின் தாக்கம் காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த ...

Read More »