செய்திமுரசு

மியான்மார் தரும் பாடம்

மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது மூன்றாவது இராணுவச் சதியை அரங்கேற்றியது. மியான்மாருக்கு இராணுவச் சதியும் இராணுவ ஆட்சியும் புதிதல்ல. ஆனால், மாறிவரும் உலக ஒழுங்கில், கொவிட்-19 நோயின் நெருக்கடிக்கு மத்தியில், ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவாலுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த இராணுவச் சதி முக்கியத்துவம் வாய்ந்தது. பர்மா என்று பொதுவில் அறியப்பட்ட மியான்மார், பிரித்தானியா கொலனி ...

Read More »

அனைத்து தடுப்பு முகாம்களையும் மூடுங்கள்!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பார்க் ஹோட்டல் வெளியே கூடிய அகதிகள் நல ஆர்வலர்கள் தடுப்பில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும், அனைத்து தடுப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற முழக்கங்களுடன் பேரணி நடத்தியிருக்கின்றனர். Campaign Against Racism and Fascism சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பேரணியில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். அண்மையில் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட Fanoush மற்றும் Imran என்ற அகதிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில வாரங்களில் சுமார் 50 அகதிகள் ...

Read More »

இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை சிறிலங்கா திருப்பி கொடுத்தது பின்னணியில் சீனா?

இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியதில் சிறிலங்காவுக்கு சீனா உதவி செய்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் டிசில்வா கூறியுள்ளார். சிறிலங்காவின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையத்தை மேம்படுத்த சிறிலங்காவுடன் இந்தியாவும் – ஜப்பானும் முத்தரப்பு ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை சமீபத்தில் சிறிலங்கா அரசு தன்னிச்சையாக ரத்து செய்தது. தொழிற்பூங்காக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இப்பணி சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் கீழ் ...

Read More »

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறித்த கண்டு பிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கஜன் இராமனாதன், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் பார்வையிட்டதுடன் குறித்த தொழில்நுட்ப ...

Read More »

சுதந்திரம் கிடைத்ததா? எல்கே தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

எல் கே (lk) டைாமைனின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல இணையதளங்கள் மீது இன்று (6) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது என இலங்கை கணனி அவசர ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் எல்கே டொமைன் தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தளங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என்ற கூற்றுடன் அடங்கிய தகவல் ஊடுருவப்பட்ட தளங்களில் பதிவாகியுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அச்சுறுத்தல், ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைக்கமுயலவேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். 73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்துவருகின்றது என ...

Read More »

ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ...

Read More »

நவால்னி: ரஷ்யாவின் புதிய லெனினா?

கடந்த 2020-ல் ரஷ்யாவில் கணிசமான அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன: கரோனா பெருந்தொற்று, அதன் விளைவான பொருளாதாரச் சரிவு, ஒரு பிராந்திய ஆளுநரின் கைது, பெலாரஸ், கிர்கிஸ்தான், மால்டோவா, நகோர்னோ-காரபாக் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால், 2021-ம் ஆண்டானது கடந்த ஆண்டின் பிரச்சினைக்குரிய சம்பவம் ஒன்றை கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது: புதினுக்கு எதிரான செயல்பாட்டாளர் அலெக்ஸி நவால்னியின் இன்னல்கள், இதனால் பல கேள்விகளுக்குப் பதிலே கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் தடைகள் மாஸ்கோவுக்குச் செல்லும் விமானத்தில் நவால்னிக்கு உடல்நலம் மோசமடைந்ததிலிருந்து இந்த நெடிய கதை தொடங்குகிறது. ஆம்ஸ்க் ...

Read More »

இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண கூறினார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட கிம்புலா எல குணா, அவரது மகன் பும்பா மற்றும் பிறிதொரு நபர் ஆகியோர் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவர் என காவல் துறை  ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்களை வெளியிட முடியும் ...

Read More »

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம்…….!

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கை முஸ்லீம்சமூகத்தினரை பெருமளவிற்கு உலுக்கியுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்ற உறுப்பினர் ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார் சுகாதாரத்திற்கு அவசியமானது என்ற எந்த நம்பிக்கையுடனும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை பின்பற்றப்படவில்லை,மாறாக முற்றிலும் இனவாத அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்படுகின்றது என்பதை அவர்கள் அறிந்ததுதம் அது அவர்களை உலுக்கியுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை பூமிக்கு ஒப்படைக்கவேண்டும் என்பது அவர்களின் அடிப்படை நம்பிக்கை என்பதால் ...

Read More »