செய்திமுரசு

சந்தித்த நபர் ஒரு தற்கொலை குண்டுதாரி.அந்த நாள் குழப்பகரமானதாக காணப்பட்டது!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் புதியமுகங்கள் காணப்படும்போது அவர்களை போதகர் வரவேற்பது வழமை.குணப்படுத்தும் தேவாலயம் என்ற அடிப்படையில் அங்கு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் வரவேற்கப்படுவது வழமை. இரண்டு வருடங்களிற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அதிகாலை போதகர் கணேசமூர்த்தி திருக்குமரன் முன்னர்அறிமுகமாக நபரை நோக்கி தனது கரங்களை நீட்டினார்.ஆனால் அந்த நபர் அதனை ஏற்கவில்லை.ஆனால் அந்த நபர் தனது பெயர் ஓமர் என தெரிவித்தார். போதகர் வேறு தேவாலயத்திற்கு செல்லவேண்டியிருந்ததால் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார், சற்று தூரம் சென்ற பின்னர் அவர் மட்டக்களப்பு தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது என்பதை ...

Read More »

யாழில்.நாட்டு துப்பாக்கி உட்பட வெடிமருந்துகளுடன் மூவர் கைது!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் பின்னர் அவர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ...

Read More »

20ஆவது திருத்தத்தை போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மையுடன்…….

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை போன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவோம். 20 இல் சில உறுப்புரைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டமையால் அவற்றை நீக்கினோம். அதே முறைமை துறைமுக நகர சட்ட மூல விவகாரத்தில் பின்பற்றப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சட்ட மூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டு ...

Read More »

‘சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது!

சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது என்றும், மேலும் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை இறப்பு பதிவு செய்யப்படவில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அபுதாபி பொது சுகாதார மையத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:- அபுதாபியில் பொது சுகாதார மையத்தின் சார்பில் சினோபார்ம் தடுப்பூசி மருந்தின் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவுகளில் சினோபார்ம் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் தொற்று காரணமாக லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மருத்துவமனையில் ...

Read More »

ஈழத்தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்- வைகோ

ஈழத்தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்தவேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பில், தடுக்கி விழுந்தால் ஒரு படை முகாம் அமைத்து, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கிய கொடுமை தொடருகின்றது. உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக் கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறிக்கின்றது. அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென ...

Read More »

சிமெந்து தொழிற்சாலையின் ‘விதி’

காங்கேசன்துறை  (கே.கே.எஸ்) சிமெந்து  தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில்  இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள்  அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன.   காணாமல் போன இயந்திரங்களுக்குஇதுவரை  ஒருவரினாலும்   இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை. அவற்றை விற்றவர் யார்?, எந்த நோக்கத்திற்காக அந்தப்  பணம் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது, ஆனால் சிமெந்து  தொழிற்சாலையின் 20க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர், ஏனெனில் ...

Read More »

இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் புதன் கிழமை காலை 8.45 மணிக்கு  இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று காலை 8.45 மணியளவில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றமையால் அந்த நேரத்திலேயே இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...

Read More »

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம்

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அவர் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருகின்றது. இதேபோல யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் நேற்றும்(நேற்று முன்தினம்) இன்றுமாக(நேற்று) இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், 77 வயது, 59 வயது நபர்களே இவ்வாறு மரணமாகினர். அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டு ...

Read More »

அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்

வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம்,  இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் மட்டு.மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று ...

Read More »

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு

பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. வர்த்தகம், ...

Read More »