திரைமுரசு

பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 ...

Read More »

போனி கபூருக்கு வாக்குறுதி கொடுத்த அஜித்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், வலிமை படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூருக்கு நடிகர் அஜித் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்காக அஜித், 6 பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார். ‘வலிமை’ படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ...

Read More »

நாங்கள் இனிமேல் மூன்று பேர்

நாங்கள் இனிமேல் மூன்று பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. நாங்கள் மூன்று ...

Read More »

பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடி இவரா?…

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுக்கு ஜோடி யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சின்ன பழுவேட்டரையர் ...

Read More »

திரைப் பார்வை: ஐந்து சகோதரிகளின் கதை

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களின் சுய அடையாளத்தை அழித்தொழிக்கும் நடைமுறைகள் நிறைந்திருக்கும் சமூகத்தை நோக்கிய தவிர்க்க முடியாத, நேர்மையான கேள்விகளை முன்வைக்கிறது இந்த துருக்கித் திரைப்படம். பெண்களைவிட ஆண்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மையுடன் செயல்படும் துருக்கி போன்ற நாட்டில் இத்தகைய கேள்விகளை எழுப்பும் படத்தைத் துணிச்சலுடன் உருவாக்கியிருக்கிறார் எர்குவேன் எனும் அறிமுகப் பெண் இயக்குநர். 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்தப் படம் பெண்ணியப் படங்களில் ...

Read More »

நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா

கொரோனா வைரஸ் பிரச்சனையால் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகருக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக கூறியிருப்பதுடன், கொரோனாவை போகுமாறு தெரிவித்துள்ளார். படப்பிடிப்புகள் இல்லாததால் இருவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ...

Read More »

பயம் தான் அதற்கு காரணம் – சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயம் தான் அதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் அளித்துள்ள பேட்டி வருமாறு:-  “கவர்ச்சியாக நடித்தால் அதற்குதான் பொருத்தம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நான் வந்த புதிதில் வணிக படங்களில் நடித்தேன். கடவுள் அருளால் அவை வித்தியாசமான கதைகளாகவும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன.  எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது. பேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லி வேடம் கிடைத்துள்ளது. இது எனது கனவு கதாபாத்திரம் ...

Read More »

விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்… அதுதான் உண்மை – விஜய் சேதுபதி

விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்… அதுதான் உண்மை என்று லாபம் படத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘லாபம்’. கமர்ஷியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். The ...

Read More »

படைப்பாளிகளின் நலன் கருதியே இந்த முடிவு – சூர்யா அறிக்கை

 சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று, கண்ணுக்கு ...

Read More »

தொடர்ந்து எக்மோ கருவி மூலம் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எக்மோ கருவி மூலம் சிகிச்சை ...

Read More »