திரைமுரசு

சீரியல் நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது

டி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர். மூன்று வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் ...

Read More »

ஹிந்தி_தெரியாது_போடா…

இந்தி தெரியாததால் இயக்குனர் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இன்று   இந்தியாவில் தேசிய அளவில் டிரெண்டானது. இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலையத்தில் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டது குறித்து ...

Read More »

பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை

விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் ...

Read More »

ஈழத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு !

மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் வருகிற ...

Read More »

பறவைகளே பத்திரம்… இது தீப்பிடித்த காடு

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தியதன் மூலம் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பஸ்போக்குவரத்து தொடங்கியது. அலுவலகங்கள் செல்லும் ஊழியர்களால் சாலைகளில் கார், இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தன. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களிலும் மக்கள் குவிந்தனர். இ-பாஸ் ரத்தினால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இது ஒரு புறம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இந்த தளர்வினால் கொரோனா பரவுமோ என்ற பீதியும் நிலவுகிறது. ...

Read More »

புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம். நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், ...

Read More »

மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் மாணவர்களுக்காக ரூபாய் 2.5 கோடி ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். அதில் ரூ.1.5 கோடி ஏற்கனவே திரையுலகினர்களுக்கு கொடுத்துவிட்டார்.  இந்த நிலையில் தற்போது ரூ.2.5 கோடி மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும்‌ வணக்கம்‌. ‘ஈதல்‌ இசைபட வாழ்தல்‌’ என்பதே தமிழர்‌ வாழ்க்கை ...

Read More »

முதலில் அம்மா… நேற்று அப்பா.. அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகை நிலா

முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவில் இருந்து வெகு விரைவில் மீள்வது மகிழ்ச்சியளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து ...

Read More »

விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றனர். ...

Read More »

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் ...

Read More »