திரைமுரசு

கமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன்

பாடலாசிரியர் சினேகனின் திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார். தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார். கன்னிகா ரவி, கமல், சினேகன் இதில் இரு ...

Read More »

‘மாறன்’ ஆக அதிரடி காட்ட வரும் தனுஷ்

கார்த்திக் நரேன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார், விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்கிறார். ...

Read More »

ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு… நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ...

Read More »

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக பல முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். ...

Read More »

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்- தோழி உயிரிழப்பு

நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகாவின் தோழி, வள்ளிச்செட்டி பவணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு ...

Read More »

அவரது நுணுக்கமான அறிவு அபாரம் – ரித்விகா

தென்னிந்திய நடிகையும், பிக்பாஸ் வெற்றியாளருமான ரித்விகா, தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், அறிமுக இயக்குனர் அரவிந்த் சாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரௌத்திரம்” கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. இப்படம் ...

Read More »

‘எதற்கும் துணிந்தவன்’

நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், அவரது புதிய படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ...

Read More »

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாக ...

Read More »

மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது நவரசா வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் அவர், கவுதம் மேனன் இயக்கி உள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ போன்ற படங்களையும் கைவசம் ...

Read More »

வெப் தொடரில் அறிமுகமாகும் கவின்

நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘லிப்ட்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்ட கவின், ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இவர் தற்போது ‘லிப்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், நடிகர் ...

Read More »