அவுஸ்திரேலியமுரசு

இந்தியாவில் தயாரான Covid தடுப்பூசியை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது

மருந்துகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான Therapeutic Goods Administration (TGA) மேலும் இரண்டு COVID-19 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. Covaxin மற்றும் BBIBP-CorV தடுப்பூசிகளும் ஏற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசிகள் என்பதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் பலர் நாடு திரும்ப ஒழுங்குகள் மேற் கொண்டுள்ளார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Covaxin மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட BBIBP-CorV தடுப்பூசிகளை TGA அங்கீகரிப்பதாகக் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இந்தத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் இந்நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக TGA வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. TGA அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளில் ஒன்றை ...

Read More »

கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி

வெளிநாடு பயணிகளின் நலன் கருதி, ஆஸ்திரேலியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார மையம் இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து, சிகிச்சை முறை பொருட்கள் நிர்வாகம் (டிஜிஏ), ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாவது:- சர்வதேச அளவில் பயன்பாட்டில் ...

Read More »

மனதை ரணமாக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு மையத்தின் நிலை

“அவர்கள் இதனை ஹோட்டல் என்கிறார்கள், ஆனால் இது ஒரு சிறை. தனியார் கையில் உள்ள சிறை. இந்த அகதிகளின் துயரத்தை வைத்து மில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். மெல்பேர்ன் நகரின் நடுவே உள்ள கறை இது. இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் அரண் மயில்வாகனம்.

Read More »

வெளிநாட்டு மாணவர்களை குயின்ஸ்லாந்து மீண்டும் வரவேற்கிறது

வெளிநாட்டு மாணவர்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு அடுத்த வருடம் திரும்பலாம் என்று Premier Anastasia Palaszczuk அறிவித்தார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தொற்றைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பில் கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகதி

தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னின் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கணக்குப்படி, அத்தடுப்பில் உள்ள 15 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

வெளிநாடுகளிலிருந்து மெல்பன் வருபவர்களுக்கு இனி ‘தனிமைப்படுத்தல் கிடையாது’!

வெளிநாடுகளிலிருந்து விக்டோரியா திரும்பும் ஆஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், விடுதிகளிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார். எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீக்கவுள்ள பின்னணியில் விக்டோரியாவும் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன்படி நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் விக்டோரியா வரும் ஆஸ்திரேலியர்கள்(முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள்) மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள்  விடுதிகளில்/வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை. ...

Read More »

மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்டது

விக்டோரியா மிக நீண்ட காலம் முடக்க நிலையில் இருந்த நகர் என்ற பெயர் பெற்றிருக்கும் மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்ட அதே நாள், விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,189 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள். முன்னர் கணித்ததற்கு ஒரு வாரம் முன்னராகவே, அக்டோபர் 30ஆம் தேதி, விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதமாகும் என தற்போதைய கணிப்புகள் சொல்கின்றன. வெளி நாடுகளிலிருந்து நவம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர் ...

Read More »

விக்டோரியாவில் 70 சதவீதமானோர் தடுப்பூசி முழுமையாகப் போட்டுவிட்டார்கள்

விக்டோரியா விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,332 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள். மெல்பன் நகரில் ஆறாவது தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள், இன்றிரவு 11:59ற்கு நிறைவுக்கு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து மாநிலம் வருவோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற செய்முறை அடுத்த வாரம் பரீட்சிக்கப்படத் தொடங்குகிறது. விக்டோரியா மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டு விட்டார்கள் என்று பிரதமர் Scott ...

Read More »

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது ஆஸ்திரேலியா

கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 93 சதவீதம் பாதுகாப்பானது என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச பயணங்கள் படிப்படியாக இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகின்றன. எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே பெரும்பாலான நாடுகள் அனுமதித்து வருகின்றன. ஒரு நாட்டில் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற ஆப்கான் குழந்தைகள்

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான் எனும் கடும்போக்குவாத அமைப்பின் வசம் சென்றது முதல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் வேலைக்குச் செல்ல பல்வேறு விதமான தடைகளை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பெற்றோர்களை இழந்த 10 ஆப்கான் குழந்தைகள் ஆப்கான்-ஆஸ்திரேலியரான மக்பூபா ராவி உதவியுடன் அந்த அமைப்பின் கொடூர பிடியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

Read More »